பூர்வீகப் பூமியைப்
பிழக்கிறது போர்.
யாருமினி மீளார் என்ற
முடிவாய் பேரவலப்
போர் மூட்டுகிறது உலகம்.
இனியெமக்குப் பிறப்புமில்லை
இறப்புமில்லை எந்தப் பூமியும்
எமக்காய் நீதி கேட்கவோ
நியாயம் சொல்லவோ யாருமேயில்லை.
பிழந்து கிழிந்து கந்தலாய்
தாய்நில வளங்களும்
தமிழரின் உயிர்களும்.
கண்ணீரும் குருதியும்
கலந்து எங்கள் காலமும்
கடைசி நம்பிக்கையும்
போகிறது போக்கிடமின்றி....
" அக்கா கதைக்க ஆசையாயிருக்கு
எப்போதாவது சந்திப்போம்
என்ற நம்பிக்கை போய்
ஒருதரம் கதைக்க வேணுபோலயிருக்கு"
என்ற தம்பியும்....
கடைசியாய் அவன்
கதை சொன்ன குரலும்
உறவின் பலமறுத்து
அவன் நினைவுகளை
விட்டுச் சென்ற
குரல் தொலைகிறது....
சின்ன வயதுத் தோழி வன்னியில்
செல்லடியில் செத்தாளாம்.
அவள் செல்ல மகள்
தனித்துப் போனாளாம்.
ஒளியலை விழியில் ஒளிப்படமாய்
சிதறிய அவளும்
பிணங்களின் நடுவே
அழுதபடி அவள் மகள்
ஆற்றுதற்கு ஆளின்றி
அனாதையாய் போனாள்.....
பேரவலம் ஒன்றின் பிரளயம்
பதுங்குழியிலும் பாதுகாப்பற்ற
பாழ் வெளியிலும்
குற்றுயிராய் குடல் பிழந்து
தமிழின ஆன்மா
ஆற்றவோ அணைத்துத் தேற்றவோ
ஆளின்றித் தனித்து
கடைசிச் சொட்டு நம்பிக்கையும்
காற்றோடு காற்றாய்....
கந்தகப்புகையோடு புகையாய்...
20.04.09 (காலை 09.58)
No comments:
Post a Comment