Sunday, July 11, 2010

பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே...?

இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்துபோனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம்வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலதுகையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயதுஇளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில்வாழ்கிறான்..

அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கானஎதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும்இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்றகனவோடு தனக்காய் ஒரு தொழிலைத் தேடுகிறான். ஒற்றையுடன் இருக்கும்இவனை எந்த நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளாத நிலமையிலும் தினம் தினம்வேலைதேடி அலைகிறான் இவன். அண்மையில் இவன் ஒரு கடையில் வேலைதேடிச்சென்ற நேரம் அவனது ஒற்றைக்கையை காரணம் காட்டி அவனுக்குவேலை மறுக்கப்பட்ட போது மனமுடைந்து ஓரிடத்தில் நின்றவனை நேசக்கரம்பயனாளர் ஒருவர் நம்பிக்கையளித்து நேசக்கரத்திடம் கொண்டு வந்துசேர்த்திருக்கிறார்.

No comments: