Thursday, October 10, 2013

காவல் தேவதை மாலதி.


வீரம் தந்தவள்
விடுதலைப் பயணத்தின்
வீரியம் சொன்னவள்
ஏங்களில் ஓர்மத்தை விதைத்த
எழுச்சியின் குறியீடு
எழுதிய வரலாறு மாலதி.

சுதந்திரப் பொருளுரைத்துப்
பெண்ணின் பெருமையை
பேறாக்கிய பெருமை
பெரும் பேறாய் எம்மினத்தில்
பிறந்த பெருந்தீ.

கோப்பாய் வெளிக்காற்று
ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம்
கண்ணகை தெய்வமாய்
அங்கெல்லாம் மாலதி
காவல் தேவதையாய்....!

காலநதி உன்
கலையா நினைவோடு
கரைகிறது தோழி
மாலதியென்றெம் மனங்களில்
மூட்டிய தீயின் அடையாளம்
மாலதி படையணியாய்....!

10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் )

No comments: