Monday, January 13, 2014

தேசத்தின் புயல் மாதவன்.



பச்சை வயல் நிறைந்த 
தென்மராட்சி மண்ணில் 
மாதவமாய் வந்துதித்த 
மனோரஞ்சன்.

தொண்ணூறுகளின் தொடக்கம்....,

யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும்
வீரனாய் புலி வேங்கையாய்
போர்க்காலமொன்றில் 
யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான்.

'மாதவன்'
மறக்க முடியாத நினைவுகளில் 
அவன் புன்னகையும் ஆழுமையும்
ஆற்றலின் பன்முகமும் 
அழியாச்சுடர் அவன்.....!

நெருப்பைச் சுமந்தான் 
சிரிப்பில் மட்டும் 
இனிப்பாய் கரைந்தான்.
இனிமையான போராளியாய்
இதயங்களில் நிறைந்தான்....!

இசையூடக வழியே பாடகனாய்
திரையூடக வழியே நடிகனாய்
கவியூடக வழியே கவிஞனாய்
கலையின் மொத்த வடிவம் - மாதவன் 
கலைபண்பாட்டுக்கழகத்தில்
இவனொரு வரலாறு.

இவனின்றிய வரலாறொன்று 
இருந்தறியாத நாட்களில் 
கலைகடந்து கனரகம் சுமந்து
களம் கண்ட போர் வீரன்
ஓய்வின்றி உழைத்தவன் 
ஒருநாள் ஓய்ந்து போனான்.

வீரனாய் விழிமூடி வுpத்தாய் 
ஓயாத அலை மூன்றில்
காயாத வீரத்தின் கதையாக
கண்மூடித்துயின்றான்....!

தென்றலாய் வளர்ந்து தேசத்தின் புயலாகி
கண்களில் என்றும் போல் 
கனதியான புன்னகை
கடைசிவரையிலும் கனலாய் திரிந்து
கடைசி விடியலின் பூவிதழ் நுனியில்
வாசனையாய் வரலாறாய்
சென்றான் மாதவன் வென்றான்....!

ஏன்றுமே மாறாத அன்பொடு 
போனான் வீரனாய் மேஜர் மாதவன்
இன்றுமுன் நினைவுகள் நேற்றுப் போலவே 
நீதிரிந்த தெருக்களில் உனது சுவடுகள்
நீ நேசித்தவர்கள் நெஞ்சுகளில் 
நீங்கா நினைவாய் தேங்கியிருக்கிறாய்
தேசத்தின் புயலாய்....!


- சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

No comments: