Sunday, March 23, 2014

பெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் என்ற காமுகன்.

22.03.2014 அன்று ttnnews என்ற இணையத்தினை நடாத்தும் விசுவலிங்கம் சிறீறங்கராம் என்ற றாம் அவர்கள் முன்னாள் போராளியான அஸ்வினி பற்றி தனது இணையத்தளமான ttnnews இல் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்யான செய்தியொன்றை எழுதியிருந்தார். அச்செய்திக்கு தானே பல பெயர்களில் கருத்தும் எழுதி அஸ்வினி அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளார்.

பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் மகளீர் பிரிவின் தளபதியாக இருந்த அஸ்வினி அவர்கள் காமக்கதை பேசி புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் பறிப்பதாகவும் இறுதி யுத்தத்தில் அஸ்வினி அவர்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவினிருடன் உல்லாசமாக இருந்து பலரை காட்டிக் கொடுத்ததாகவும் எழுதி தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் றாம்.

தனது வாழ்க்கையை எங்கள் இனத்தின் விடுதலைக்காகவே தந்து இன்று வாழும் வழியையும் இழந்து நிற்கும் இந்தப் போராளியின் தற்போதைய வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது றாம் என்ற வக்கிரம் பிடித்த காமுகனின் செய்தி. அஸ்வினியினதும் அவரது குடும்பத்தினது வாழ்வும் அவரது பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் என்ன செய்யப்போகிறோம் ?

ஒரு சக பெண்ணை தோழியை எங்களுக்காக போராடி எல்லாம் இழந்து யாராவது புலம்பெயர்ந்தவர்கள் உதவுவார்கள் என்று நம்பி கையேந்திய அஸ்வினி மீதான ஊடக வன்முறைக்கு எதிராக பேசாமல் மௌனமாக என்னால் இருக்க முடியவில்லை. அஸ்வினிக்காக குரல் கொடுக்கும் என்மீது கூட நாளை இந்த ஊடக வியாபாரியால் ஏதாவது புனைகதையொன்றைத் தயாரிக்க முடியும்.

அநீதிகளை எதிர்த்தோ அல்லது சக பெண்போராளி மீதான பாலியல் அச்சுறுத்தலை எதிர்த்தோ ஒரு பெண் நின்றால் அவளுக்கு இந்த றாம் போன்ற தமிழ் ஆணாதிக்கம் கொடுக்கும் பட்டம் விபச்சாரிகள்.

சக பெண் போராளிகளை வெளிநாடு அழைப்பதாகவும் , திருமணம் செய்வதாகவும் பொய் கூறி ஏமாற்றிய றாமை எதிர்த்து தன் சக தோழிகளுக்கு நியாயம் கேட்டதற்காக இன்று அஸ்வினி என்ற முன்னாள் போராளி றாம் என்ற காமுகனின் பொய்யான பழிக்கு ஆழாகியிருக்கிறாள்.

அக்கிரமத்தைக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு பெண்ணையும் றாமின் ஆணாதிக்க வக்கிரம் பலியெடுத்துக் கொண்டே போகப்போகிறது. தயை கூர்ந்து தமிழ்ப் பெண்கள் அனைவரும் இந்த றாமின் அடாவடித்தனத்துக்கும் பெண்போராளிகள் மீதான இத்தகைய ஊடக வக்கிரத்திற்கும் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

போரில் எல்லாவற்றையும் இழந்த பல போராளிகள் இந்தியா, இந்தோனேசியா , மலேசியா என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு நல்வாழ்வொன்று வருமென்று நம்பும் இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உதவி கேட்கிறார்கள். உதவுகிறோம் எனும் பெயரால் அவர்களது சுயமரியாதையை கௌரவத்தை விலைபேசும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலரால் எத்தனையோ பெண்களின் வாழ்வு அனாதரவாகிக்கிடக்கிறது.

ஒருகாலம் வன்னிக்குச் செல்லவும் போராளிகளைக் சந்திக்கவும் இவர்களது தோழ தோழியர்கள் என்று சொல்லியும் பெருமைப்பட்டு படங்கள் எடுத்துக் கொண்டு புலம் வந்தவர்கள் தங்களுக்கு ஏதோவொரு வழியைக் காட்டுவார்கள் என்று நம்பியே உதவிகள் கேட்கிறார்கள். உதவி ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்பட்டிருக்கிறது.

ஆனால் உதவுகிறோம் என்பதற்காகவே தங்கள் இச்சைகளுக்கு அவர்களைப் பலியாக்குவதும் , உடன்படாதவர்களை விபச்சாரிகள் , இலங்கையரச புலனாய்வாளர்களின் ஆசைநாயகிகள் என எழுதி அவர்களது வாழ்வின் நிம்மதியைப் பறிக்கின்ற றாம் போன்றவர்களின் அடாவடிகளைப் பார்த்தும் இன்னும் மௌனமாயே இருக்கப் போகிறதா ?

மேலும் பல போராளிப் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களுக்கு உதவுவுதாகக் கூறி பலருக்கு பல பெண்களை விற்ற றாமின் உண்மை முகத்தை பல முன்னாள் போராளிகளும் இன்னும் நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இவரது உதவிகளுக்குப் பின்னால் பல மர்மங்களும் பலரது முகங்களும் மறைந்து கிடக்கிறது. அவர்களையும் விரைவில் வெளிப்படுத்துவோம்.

ஓவ்வொரு போராளியும் வாழ்க்கையின் இளமைக் காலத்தை போராட்ட களத்தில் கொடுத்து வெளியுலக வாழ்வினை அனுபவிக்காதவர்கள். இவர்கள் மக்களையும் மண்ணையும் மட்டுமே நேசித்தவர்கள். றாம் போன்ற வக்கிரமானவர்கள் எல்லாம் இதே தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாதவர்கள்.

உதவுகிறோம் என அழைத்தவுடன் தங்கள்  வறுமையையும் தங்கள் நிலமையையெல்லாம் கூறிவிடுகிறார்கள். வறுமையும் யாரும் ஆறுதலுக்கு இல்லாத நிலமையிலும் இருக்கும் போராளிகள். அவர்கள் மீது அன்பு காட்டுவது போல பேசி சில ஆயிரம் ரூபாய்களை உதவிவிட்டு தன்னுடைய பாலியல் வியாதிக்கு வடிகால் தேடும் றாம் போன்றவர்களால் தொடர்ந்து பல பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

றாமின் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை வரையும் சென்ற பெண்போராளிகளும் இன்னும் தங்களால் வெளியில் சொல்லியழ முடியாத துயரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருடாவருடம் பலமுறை சுற்றுலா சென்று வரும் போதெல்லாம் பல பெண்களின் வாழ்வை பலியெடுத்துக் கொண்டு வருகிற மிருகம்.

தாயகத்தில் வாழும் பல பெண்போராளிகளின் குடும்பங்களை சிறைக்கு அனுப்புவேன் என தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் றாமின் அச்சுறுத்தலுக்குத் தினமும் பயந்தபடி வாழும் போராளிகளின் கண்ணீருக்கும் துரயத்துக்கும் முடிவு என்ன ?

றாம் என்பவர் யார் !

இவர் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர். விசுவலிங்கம் சிறீறங்கராம் என்பது இயற்பெயர். 90களில் புலிகள் அமைப்பில் இணைந்து 95இல் காவலரணிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடியவர்.  பின்னர் இந்தியா சென்று பிரித்தானியாவை வந்தடைந்தவர்.

மச்சாள் முறையான றாதிகாவைத் திருமணம் செய்து 2பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையோடும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ராதிகா இந்தக் காமுகனின் எல்லா அடாவடிகளையும் தாங்கிக் கொண்டு வாழும் கண்ணகி கால மனைவி. தன்போன்ற பெண்களை பாலியல் வக்கிரம் புரியும் விடயங்களை அறிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருக்கிறார்.

2009வரை றாம் யாரென்று யாருக்கும் தெரியாது. 2009யுத்த முடிவின் பின்னர் தான் தலைவர் பிரபாகரனின் மைத்துனன் எனவும் மூத்த பெண்போராளி ஒருவரின் தம்பியெனவும் கூறிக் கொண்டு ஆட்கடத்தல் வேலையை ஆரம்பித்திருந்தார்.

2009நாட்டில் இருக்க முடியாத நிலமையில் இருந்த போராளிகள் பலரை வெளிநாடு அழைக்கும் ஆட்கடத்தல் முகவராக வெளிப்படையாக இயங்கத் தொடங்கிய போதே பல போராளிகள் இவரிடம் உதவி கேட்கும் நிலையேற்பட்டது.

தாயகத்தில் இருந்த பல போராளிகளுக்கு அங்கே வாழ முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி பல போராளிகளை மலேசியா , இந்தியா , இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்து பாதுகாப்பு வழங்குவதாக உதவிகளைக் கோரியிருந்தார். இவனது கதைகளை நம்பி புலத்திலிருந்து பலர் உதவிகளையும் வழங்கியிருந்தார்கள்.

சில லட்சங்களுடன் தங்கள் வாழ்க்கையை அவுஸ்ரேலியா ,கனடா , ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ வழி கிடைக்கும் என நம்பிய பலர் தங்கள் பணத்தையும் இழந்து இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். இருந்த உடமைகளையும் விற்று றாமை நம்பி வெளிநாடு பார்க்க வெளிக்கிட்ட பலர் தற்போது எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்.

வெளிநாடு அழைக்கிறேன் என்றும் தனது மனைவி இறந்துவிட்டாரெனவும் கூறி பல போராளிப் பெண்களை ஆசிய நாடுகளில் அழைத்து அவர்களை பாலியல் வதை செய்திருக்கிறான். இவனால்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பை யாராலும் வழங்க முடியவில்லை. வந்த நாடுகளில் சட்ட ரீதியற்று வாழ்வதால் சட்டம் உள்ளே தள்ளிவிடுமென்ற பயத்தில் றாமின் அநியாயத்துக்கெல்லாம் பல பெண்கள் பலியாகியுள்ளார்கள்.

இன்னும் தொடரும்.....!

3 comments:

Anonymous said...

plz put ttnnews link

அனு said...

இவனைப் போன்றவர்களை உயிரோடு விடுவது நம் இனத்திற்கே பெரும் இழுக்கு. இந்த நாயைக் கல்லால் அடித்துக் கொல்லணும்.

அனு said...

இந்த நாயைக் கல்லால் அடித்துக் கொல்லணும்.