Friday, July 5, 2013

ஒரு கரும்புலியின் நினைவாக

தினம் தீயில் நீ குளித்தாய்
தியாகத்தின் பொருள் விளக்க
புலியே நீ புகழ் வெறுத்தாய்.....

இதயத்தில் நீ சுமந்த
இலட்சிய நெருப்பதிலே
உன்னுயிரை முடிந்து வைத்தாய்
என்னொடியும் உன்னுயிரை
உதறிவிட நீ துணிந்தாய்....

விழியுறக்கம் நீ மறந்து
விளக்காகி ஒளிதந்து
எங்கள் விடியலின் கிழக்காகி
சூரியனை வலம் வந்தாய்
பகை வாசலிலே போய்த்திரிந்தாய்....!

உன் இலக்கு உன்னை எட்ட முன்னம்
உயிர்ப்பூ வாடியுதிர
உடற்கணுக்கள் துடிப்பிழந்து
ஓ...எங்கள் உடன்பிறப்பே
உறங்கி போனாயோ ?

உன் முகமறியேன்
உன் குரலும் கேட்டறியேன்
அவன் வரமாட்டான்
உன் கூட நின்றவன்
உறுதிப்படுத்திய செய்தியது.....!

விழி கண்ணீர் மாலையிட
வீரனே....!
விக்கித்து விம்முகிறேன்
வேறென்ன செய்வேன்.

2003 யேர்மனியில் வெளியிடப்பட்ட மாவீரர் மலரில் இடம்பெற்ற கவிதை. ஒரு கரும்புலியின் நினைவாக எழுதப்பட்டது.10 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் மீளும் நினைவாக)

No comments: